சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள்  திடீர் ஆலோசனை


சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள்  திடீர் ஆலோசனை


எடப்பாடி நகராட்சியை 50 ஆண்டுகளுக்கு பிறகுதிமுககைப்பற்றிய நிலையில், முதல் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதனிடையேஅதிமுகவின்  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று திடீர் பயணமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு பயணம் மேற்கொண்டார்.

எடப்பாடி பயணியர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள்  திடீர் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் சார்பில் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர்கள் மற்றும் எடப்பாடி பகுதி நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

Must Read : நியூஸ் 18 செய்தி எதிரொலி... வறுமையில் 3 பெண் பிள்ளைகளுடன் தவிக்கும் விதவை தாய்க்கு பிரதம மந்திரி திட்டத்தில் புதிய வீடு

தொடர்ந்து கட்சியினர் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தொடர்ந்து மக்கள் பணியாற்றி அடிப்படை பணிகளை செய்து மக்களுக்கான ஒரு இயக்கமாக அதிமுக இயக்கத்தை நாம் கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

Honey Sriracha Pork Chops