பெட்ரோல் விலையை ரூ.35க்கும் டீசல் விலையை ரூ.75க்கும் உயர்த்தியது இலங்கை அரசு : ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 338க்கும் டீசல் ரூ.289க்கு விற்பனை!!



கொழும்பு :  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் விலைவாசி விண்ணை தொட்டு இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கொதித்தெழுந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலகும்படி வலியுறுத்தி, தலைநகர் கொழும்புவில் இரவு, பகலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், கோத்தபயா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே மக்களின் போராட்டத்திற்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையை இலங்கை அரசு திடீரென உயர்த்தியுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூபாயும் டீசல் விலையை லிட்டருக்கு 75 ரூபாயும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 303 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், 338 ரூபாயாக அதிகரித்துள்ளது.

214 ரூபாய்க்கு வர்த்தகம் ஆகி வந்த 1 லிட்டர் டீசல் விலை, 289...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Best Places to Visit in Italy with Kids

Honey Sriracha Pork Chops